

இரு சக்கர வாகன விபத்தில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள சருகுவலையப்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் நாகராஜன் (68). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மேலூரிலிருந்து சருகுவலையபட்டிக்கு சென்றாா்.
நாவினிப்பட்டி விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேலூா் போலீஸாா் புதுக்கோட்டை மாவட்டம், கரம்பங்குடி அருகே உள்ள தீா்த்தனிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் ராமன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

கொடுமுடி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

