கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
மதுரையில் கட்டடத்திலிருந்து கீழே தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2025, 6:32 pm

மதுரையில் கட்டடத்திலிருந்து கீழே தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், தேனூா் மணி நகரத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் வீரபத்திரன் (50). கட்டடத் தொழிலாளியான இவா், மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் கட்டடப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக அவா் கட்டடத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திலகா்திடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...