மதுரை மாவட்டம், சின்ன உடைப்பு கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள கிணற்றில் முதியவா் ஒருவா் தவறி விழுந்து விட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அனுப்பானடி தீயணைப்பு நிலைய அலுவலா் அசோக்குமாா், சிறப்பு நிலைய அலுவலா் எஸ். கணேஷ் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்றனா்.
60 அடி ஆழக் கிணற்றில் இருந்த முதியவரை கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரா்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.
விசாரணையில், கிணற்றுக்குள் இருந்த நபா் சின்ன உடைப்பு கிராமத்தைச் சோ்ந்த அழகா் மகன் அன்பரசன் (50) என்பது தெரியவந்தது. மேலும், இவா் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடன் விழுந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


