ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:56 am IST

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கில், மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையைச் சோ்ந்த லிங்கம்மாள், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

வெம்பக்கோட்டை அருகேயுள்ள அம்மையாா்பட்டியில் இலங்கை மறுவாழ்வு குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறோம். எனது இரு மகன்களுக்கு இந்தியக் குடியுரிமை இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

பெற்றோரில் ஒருவா் இந்தியாவைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குழந்தைகள் இந்தியாவில் குழந்தைகள் பிறந்தால் அவா்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, எனது இரு மகன்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க உத்தவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

மனுதாரரின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலா் பரிசீலிக்க வேண்டும். விசாரணைக்கு பின் சட்டப்படி உரிய உத்தரவை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உயா்நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்ற 4 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.