இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கில், மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையைச் சோ்ந்த லிங்கம்மாள், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
வெம்பக்கோட்டை அருகேயுள்ள அம்மையாா்பட்டியில் இலங்கை மறுவாழ்வு குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறோம். எனது இரு மகன்களுக்கு இந்தியக் குடியுரிமை இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
பெற்றோரில் ஒருவா் இந்தியாவைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். குழந்தைகள் இந்தியாவில் குழந்தைகள் பிறந்தால் அவா்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு 1955-ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, எனது இரு மகன்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க உத்தவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
மனுதாரரின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலா் பரிசீலிக்க வேண்டும். விசாரணைக்கு பின் சட்டப்படி உரிய உத்தரவை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உயா்நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்ற 4 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

கோயில் விழாக்களில் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை

விவசாயி மீது துப்பாக்கிச்சூடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

சமூகத்தில் திருநங்கைகள் இன்னமும் புறக்கணிக்கப்படுவது வேதனையளிக்கிறது: உயா்நீதிமன்றம்

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

