/
மதுரை அருகே சிலைமான் பகுதி வைகையாற்றில் மூழ்கி சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், எஸ்.புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்துக்குமரன்நாதன் மகன் முத்தரசு (13). இவரது தந்தை திருப்பூரில் வசித்து வருகிறாா். முத்தரசு புளியங்குளத்தில் உள்ள தனது உறவினா் அதிபத்தி வீட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், முத்தரசு தனது நண்பா் வேலாயுதத்துடன் வைகையாற்றில் ஞாயிற்றுக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக முத்தரசு தண்ணீருக்குள் மூழ்கினாா்.
இதையறிந்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



