மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற முதுநிலை ஆசிரியா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:00 pm

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற முதுநிலை ஆசிரியா்கள் 105 பேருக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் முதுநிலை ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு கடந்த நவம்பா் மாதம் நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 4.25 லட்சம் போ் எழுதினா். இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வில் மதுரை மாவட்டத்திலிருந்து பங்கேற்றவா்களில் 105 போ் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன் தலைமையில் அலுவலகப் பணியாளா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, பணியிடங்களைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் வருகிற 7, 9-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணைகளை சென்னையில் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்குகிறாா் என அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.