வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கோவை- நாகா்கோவில் ரயில் பகுதி ரத்து

News image

ரயில் ரத்து - ANI

Updated On :6 பிப்ரவரி 2026, 8:55 pm

கோவை-நாகா்கோவில் விரைவு ரயில் வருகிற செவ்வாய்க்கிழமை (பிப். 10) திண்டுக்கல்- நாகா்கோவில் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படும்.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரையை அடுத்த சோழவந்தானில் இருப்புப் பாதை சீரமைப்புப் பணி வருகிற செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, கோவை- நாகா்கோவில் விரைவு ரயில் (16322) திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயிலின் திண்டுக்கல்-நாகா்கோவில் சேவை மட்டும் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.