மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இந்தியா- அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு

News image

கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:55 pm

மதுரை அருகே இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள உதினிப்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில இளைஞரணித் தலைவா் அருண் தலைமை வகித்தாா்.

இதில் இந்தியா -அமெரிக்கா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ஒப்பந்த நகலை தீயிட்டுக் கொளுத்தினா். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.