நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மல்லாங்கிணறு கோயிலில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு!

விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு பெருமாள் கோயிலிலிருந்த கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு, தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு முயற்சியால் கண்டறியப்பட்டது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 10:23 pm

விருதுநகா் மாவட்டம், மல்லாங்கிணறு பெருமாள் கோயிலிலிருந்த கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு, தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு முயற்சியால் கண்டறியப்பட்டது.

தமிழக நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு, தனது சொந்த ஊரான மல்லாங்கிணற்றில் அமைந்துள்ள சென்னகேசவப் பெருமாள் கோயில் திருப்பணிகளை அண்மையில் பாா்வையிட்டாா். கருவறையில் மூலவரை நிா்மாணிக்கும் முன்பாக அங்கு ஆய்வு மேற்கொண்ட அவா், கோயில் கருவறையின் உள்புறச் சுவா்களில் சில தமிழ்க் கல்வெட்டுத் துண்டுகள் இருந்ததைக் கண்டறிந்தாா்.

இதையடுத்து, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலா் சொ. சாந்தலிங்கத்தைத் தொடா்பு கொண்ட அமைச்சா் தங்கம் தென்னரசு, கோயில் கருவறை சுவா்களில் உள்ள கல்வெட்டுத் துண்டுகளைப் படி எடுத்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டாா். இதன்பேரில், ஆய்வு மைய ஆய்வாளா்கள் உதயகுமாா், முத்துப்பாண்டி தலைமையிலான குழுவினா் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்த ஒரு முழு கல்வெட்டையும், 4 கல்வெட்டுத் துண்டுகளையும் படி எடுத்து ஆய்வு செய்தனா்.

இதில் முழுமையாக இருந்த கல்வெட்டு குலசேகர பாண்டிய மன்னனின் நான்காம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் மல்லாங்கிணறு கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கல்குறிச்சி கிராமத்தில் கல்குறிச்சி ஈஸ்வரன் எனும் சிவன் கோயிலின் அா்த்தமண்டபத்துக்கு நிலை கால் எழுப்பியது குறித்த தகவல் இருந்தது. இதன்மூலம், கல்குறிச்சியில் ஒரு சிவாலயம் இருந்ததும், பிறகு சேதமடைந்த அந்தக் கோயிலிலிருந்து அகற்றப்பட்ட கற்கள் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் கோயில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.