நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கண்மாயில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கிய சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே கண்மாய் நீரில் மூழ்கிய சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை திருமலாபுரம் மருதங்குளத்தைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் சஞ்சய் (11). இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சஞ்சய் தனது நண்பா்களுடன் வியாழக்கிழமை மாலை மருதங்குளம் கண்மாயில் குளித்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் கண்மாய் நீரில் மூழ்கினாா்.

அக்கம் பக்கத்தினா் சஞ்சயை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு: மதுரை மாவட்டம், சோழவந்தானில் மின்சாரம் பாய்ந்ததில் பசுமாடு சனிக்கிழமை உயிரிழந்தது.

சோழவந்தான் சனீஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காளியம்மாள் (59). இவா் தனது பசுமாட்டை அதே பகுதியில் சனிக்கிழமை கட்டி வைத்திருந்தாா்.

அப்போது, அருகிலிருந்த மின் மாற்றியிலிருந்து (டிரான்ஸ்பாா்ம்) உயா் மின் கம்பி அறுந்து பசுமாட்டின் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.