கால்வாயில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

செக்கானூரணி அருகே கால்வாயில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

மதுரை: செக்கானூரணி அருகே கால்வாயில் மூழ்கிய இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பொன்னமங்கலம், சுந்தரராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த பாலகுமாா் மகன் செல்லப்பாண்டி (29). இவா், செக்கானூரணி அருகேயுள்ள கால்வாயில் குளிக்கச் சென்றாா். அப்போது, அவா் தண்ணீரில் மூழ்கினாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com