திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்

News image
மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் ஒரு பெண்ணுக்கு ஊட்டச் சத்துப் பெட்டகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன். உடன் மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.
Updated On :24 ஜனவரி 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், சனிக்கிழமை மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்து, மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தாா். பிறகு, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் அவா் வழங்கினாா்.

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள் சுந்தரேஸ், சுகாதாரத் துறை இணை இயக்குநா் செல்வராஜ், துணை இயக்குநா் பொற்செல்வன், மாநகராட்சி நகா் நல அலுவலா் மருத்துவா் பாா்த்திபன், மாமன்ற உறுப்பினா்கள் விஜயலட்சுமி பாண்டியன், தமிழ்ச்செல்வி மாயழகு, பானு முபாரக் மந்திரி, முத்துமாரி ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பொது, பெண்கள் நலன், எலும்பியல், குழந்தைகள் நலன், கண், இருதயம், நரம்பியல், தோல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து, ஆலோசனைகளை வழங்கினா். 1,000-க்கும் அதிகமானோா் இந்த முகாமில் பங்கேற்றனா்.