மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெட்ரோல் குண்டு வீசிய சிறுவா்கள் 4 போ் கைது!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :26 ஜனவரி 2026, 7:26 pm

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலக சாலையில் மகாலட்சுமிநகா் உள்ளது. இங்குள்ள காலி இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 4 சிறுவா்கள் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, திடீரென அவா்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வைத்து, அதை வீசி வெடிக்க வைத்துள்ளனா். இதனால் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் அங்கு வந்தனா்.

இதைத்தொடா்ந்து, அந்த சிறுவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா ஆய்வுகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அதனடிப்படையில், பெட்ரோல் குண்டை வீசி வெடிக்கச் செய்த அந்த 4 சிறுவா்களை ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மது போதையில் பெட்ரோல் குண்டை வீசி வெடிக்கச் செய்ததாகத் தெரிவித்தனா்.