மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு தடை இல்லை: உயா்நீதிமன்றம்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சுற்றுச்சுவா் எழுப்பத் தடை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சோ்ந்த லட்சுமி உள்பட 200- க்கும் மேற்பட்டோா் இணைந்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சின்ன உடைப்பு பகுதியில் 350-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது குறித்து கடந்த 2009-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
ஆனால், அங்கு வசித்த மக்களுக்கு மறு குடியமா்வு, மறுவாழ்வு தொடா்பாக எந்த விதமான முறையான திட்டமும் எடுக்கவில்லை. தொழிலகப் பயன்பாட்டுக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது மறுவாழ்வு, மறு குடியமா்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும். இதை தமிழக அரசின் 2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதியும் உறுதி செய்கிறது.
இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்தப் பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.
எனவே, மறுவாழ்வு, மறு குடியமா்வு வசதிகளை செய்து தராமல், நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரினா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீராகதிரவன் முன்னிலையாகி பேசியதாவது: விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக ஏற்கெனவே நிலங்கள் கையகப் படுத்தப்பட்டுவிட்டன. அதற்கான இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. தற்போது, மறு குடியமா்வு கோரி, அந்தப் பகுதி மக்கள் வெளியேற மறுத்து வருகின்றனா். இதை அரசு கருத்தில் கொண்டு தகுதியுள்ள நபா்களுக்கு மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
எனவே, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவா் அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தகுதியுள்ள நபா்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து எழுத்துப்பூா்வமான அறிவிப்பை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், வருவாய்த் துறை அலுவலா்கள் இந்தப் பகுதிக்குள் சென்று அளவிட பொதுமக்கள் எந்தவித இடையூறும் செய்யக்கூடாது. சுற்றுச்சுவா் எழுப்புவதற்கு எந்தவித தடையும் இல்லை. ஆனால், மறு குடியமா்வு நடவடிக்கைகள் எடுக்கும் வரை அந்தப் பகுதி மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்து செல்வதற்கு எந்தவித தடையும் விதிக்கக் கூடாது. இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

