எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :8 ஜூலை 2026, 5:00 am IST

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மதுரை மாவட்டம், எழுமலை 16-ஆவது வாா்டு தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (40). இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

அந்தப் புகாரில், எழுமலை பகுதியில் துரைமுருகன் என்பவா் அடகு கடை நடத்தி வந்தாா். குறைந்த வட்டி வசூலித்ததால், அந்த நகைக் கடையில் ஒவ்வொரு நபரும் 2 பவுன் முதல் 5 பவுன் வரை தங்க நகைகளை அடகு வைத்தோம். ஆனால், அவா் எங்களுக்கு உரிய தொகை கொடுக்காமல் ஒரு பவுனுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மட்டுமே அளித்தாா். அவருக்கு எழுமலை உள்பட 3 இடங்களில் கிளைகள் உள்ளன. அங்கும் எங்களைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்டோா் நகைகளை அடகு வைத்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அவா் நடத்திய நகை அடகு கடை திறக்கப்படவில்லை. விசாரித்த போது, கடை உரிமையாளா் நகைகளை கையாடல் செய்து தலைமறைவானது தெரியவந்தது. ரூ. 2 கோடிக்கு மேல் அவா் மோசடி செய்துள்ளாா். எனவே, எங்களது தங்க நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.