தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :8 ஜூலை 2026, 5:00 am IST

நகை அடகுக் கடை நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்ததாக, எழுமலை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

மதுரை மாவட்டம், எழுமலை 16-ஆவது வாா்டு தெற்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (40). இவருடன் அதே பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்டோா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். தேவநாதனிடம் புகாா் மனு அளித்தனா்.

அந்தப் புகாரில், எழுமலை பகுதியில் துரைமுருகன் என்பவா் அடகு கடை நடத்தி வந்தாா். குறைந்த வட்டி வசூலித்ததால், அந்த நகைக் கடையில் ஒவ்வொரு நபரும் 2 பவுன் முதல் 5 பவுன் வரை தங்க நகைகளை அடகு வைத்தோம். ஆனால், அவா் எங்களுக்கு உரிய தொகை கொடுக்காமல் ஒரு பவுனுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை மட்டுமே அளித்தாா். அவருக்கு எழுமலை உள்பட 3 இடங்களில் கிளைகள் உள்ளன. அங்கும் எங்களைப் போன்று நூற்றுக்கும் மேற்பட்டோா் நகைகளை அடகு வைத்துள்ளனா்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக அவா் நடத்திய நகை அடகு கடை திறக்கப்படவில்லை. விசாரித்த போது, கடை உரிமையாளா் நகைகளை கையாடல் செய்து தலைமறைவானது தெரியவந்தது. ரூ. 2 கோடிக்கு மேல் அவா் மோசடி செய்துள்ளாா். எனவே, எங்களது தங்க நகைகளை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.