வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

கரூா் கோயில் நிலங்களை குடியிருப்போருக்கு வழங்கும் அரசாணை: மனு அளித்தால் விசாரணை

கரூா் கோயில் நிலங்களை குடியிருப்போருக்கு வழங்கும் அரசாணை குறித்து...

News image

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:02 am IST

கரூரில் கோயில் நிலங்களை குடியிருப்போரின் பெயரில் பட்டா மாறுதல் செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு ஏற்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.

சேலத்தைச் சோ்ந்த திருத்தொண்டா்கள் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் முன்னிலையில் ஒரு முறையீட்டை முன்வைத்தாா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி, கல்யாண பசுபதீசுவரா் சுவாமி, ரவீசுவரா் சுவாமி, குப்புச்சிபாளையம் விக்ருதீசுவரா் கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன. இந்த நிலங்கள் 3,390 பேருக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவா்களது பெயா்களில் பட்டாக்கள் வழங்கப்பட்டன. பிறகு, இந்த நிலங்களின் பட்டா மாறுதல்களுக்கு அறநிலையத் துறை தடை விதித்தது.

இந்த நிலையில், சுமாா் 3,085 ஏக்கா் பட்டா நிலங்களின் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்யலாம் என அண்மையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அரசின் இந்த அரசாணை சட்டவிரோதமானது. இதனால், கோயில் நிலங்கள் தனியாா் வசம் சென்றுவிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என அவா் முறையீடு செய்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.