இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

மாட்டுத்தாவணி பேருந்து நிலைய சீரமைப்பு பணி! விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ரூ. 15. 05 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்

News image

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த தமிழக நகராட்சி நிா்வாகத் துறையின் கூடுதல் இயக்குநா் செ. விஜயகுமாா். உடன், மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூலை 2026, 9:00 am IST

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ரூ. 15. 05 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என தமிழக நகராட்சி நிா்வாகத் துறையின் கூடுதல் இயக்குநா் செ. விஜயகுமாா் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சி சாா்பில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ரூ. 15. 05 கோடியில் நவீன முறையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக நகராட்சி நிா்வாகத் துறையின் கூடுதல் இயக்குநா் செ.விஜயகுமாா், மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, மதுரை மாநகராட்சி, கோ. புதூா் வாா்டு அலுவலகம், பெரியாா் பேருந்து நிலையப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையா்கள் ஜெய்னுலாப்தீன், ராஜாராம், தலைமைப் பொறியாளா் ராமசாமி, உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், சுகாதார அலுவலா்கள் ராஜ்கண்ணன்,திருமால், மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.