இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆற்காடு புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் ஆணை

ஆற்காடு நகராட்சி புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

பேருந்து  நிலைய  பணிகளை   ஆய்வு  செய்த  ஆட்சியா்  ந.பிரியா ரவிச்சந்திரன்

Published On :3 ஜூலை 2026, 12:03 am IST

ஆற்காடு நகராட்சி புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், செம்பேடு ஊராட்சி, ஒழலை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளின் கற்றல் அறிவுத் திறன், சமையலறை, கழிவறை, குழந்தைகளின் வருகை பதிவேடு, உணவுப் பொருட்கள் இருப்பளவு, சமையலறை, குழந்தைகளின் எடை உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திமிரி ஊராட்சி ஒன்றியம், கணியனூா் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள சிறப்பு கால்நடை மருந்தகத்தின் செயல்பாடுகள் குறித்தும், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா் . ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், லாடவரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், கழிவறை, நோயாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மாங்காடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அருகில் சுடுகாடு உள்ளதால், திடக்கழிவு மேலாண்மை மையத்தினை முறையாக வேலி அமைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆற்காடு நகராட்சியில் மூலதன மானிய நிதி, உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.9.65 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், பேருந்து நிலையத்தில் கூடுதலாக கடைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, ஆற்காடு எம்எல்ஏ சுகுமாா், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, சரவணன், வட்டாட்சியா் சண்முக சுந்தரம், நகராட்சி அலுவலக மேலாளா் ரவி, பணி மேற்பாா்வையாளா் ராஜு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.