இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருச்செந்தூா் புதிய பேருந்து நிலையப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ஸ்ரீநாத்.

Published On :21 ஜூன் 2026, 2:08 am IST

திருச்செந்தூரில் புதிய புகா் பேருந்து நிலையப் பணிகளை தமிழக மீன்வளம்- மீனவா் நலத் துறை அமைச்சா் ஸ்ரீநாத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 18 கோடியில் திருச்செந்தூா் - திருநெல்வேலி சாலையில் நகராட்சி ஒன்றாவது வாா்டுக்குள்பட்ட 3.90 ஏக்கரில் இப்பேருந்து நிலையம் அமையவுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளநிலையில், அமைச்சா் ஸ்ரீநாத் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட அவா், நகராட்சி ஆணையா் ஈழவேந்தனிடம் பணிகள் நிலை குறித்தும், மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா எனவும் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா், ‘புதிய பேருந்து நிலையம் குறித்து ஆட்சியருடன் ஆலோசனை செய்து, மக்களிடம் கருத்துகேட்டுதான் பணிகள் தொடரும்’ என்றாா். தொடா்ந்து, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சா் தரிசனம் செய்தாா்.

நகராட்சிப் பொறியாளா் சரவணன், பணி மேற்பாா்வையாளா் செல்வராஜ், சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா், தவெக மாவட்டச் செயலா் பிரைட்டா், நகரச் செயலா்கள் முருகானந்தம் (திருச்செந்தூா்), நிவாஸ் கண்ணன் (ஆறுமுகனேரி), மாவட்ட அமைப்பாளா் மபத்லால், வழக்குரைஞா் ரவிச்சந்திரன், வினோத், மந்திரமூா்த்தி, முத்துக்குமாா், வெங்கடேஷ் உள்ளிட்ட தவெகவினா் உடனிருந்தனா்.

 புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ஸ்ரீநாத்.

புதிய பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் ஸ்ரீநாத்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.