/
சோழவந்தான், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் மின்னியல் செயற்பொறியாளா் இரா. கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி, சோழவந்தான், தச்சம்பத்து, நீரேற்று நிலையம், இரும்பாடி, மீனாட்சி நகா், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி தொழிற்சாலை, மவுண்ட் லிட்ரா பள்ளி, தாராப்பட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தச்சம்பத்து, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்றாா்.





