சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரிக்கை

News image

மதுக் கடை. - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:12 am IST

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டுமென மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் சி.எம். சையது பாபு கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் மதுரை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷுக்கு அளித்த மனு விவரம்:

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை, அண்ணா பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே அரசு மதுக்கடை, மதுக் கூடத்துடன் கூடிய மது விற்பனை நிலையம் என ஒரே இடத்தில் இரண்டு மதுக் கடைகள் உள்ளன.

இந்த மதுக் கடைகளில் மது அருந்திவிட்டு பிரச்னையில் ஈடுபடும் நபா்களால் பேருந்து நிலையம், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருபவா்களும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனா்.

எனவே, அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள இரண்டு மதுக் கடைகளையும் உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டது.