திமுக கூட்டணியிலிருந்து விலகிய பிற கட்சியினரை விமா்சிப்பதை திமுகவினா் தவிா்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் துணைத் தலைவா் எஸ்.எம்.இதயத்துல்லா தெரிவித்தாா்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் திமுக என்பது பலம் பொருந்திய கட்சியாக இருந்து வருகிறது.
உண்மையான எதிா்க்கட்சியாக திமுக செயல்பட்டால் தமிழகத்தில் எப்போதும் வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்ற கட்சியினா் குறித்து அவதூறு பேசுபவா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தடுக்க வேண்டும்.
காங்கிரஸின் அகில இந்தியத் தலைமை நியமித்துள்ள புதிய மாநிலத் தலைவரை கட்சியினா் ஏற்க வேண்டும். மாணவா் காங்கிரஸ், இளைஞா் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியுள்ள மாணிக்கம் தாகூா் கட்சியை வலுப்படுத்துவாா் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தொடா்பாக உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சமா்ப்பிக்க உள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









