பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் தேரோட்டம்

News image
தேரில் எழுந்தருளிய பிரியாவிடையுடன் சுவாமி.
Updated On :2 மார்ச் 2026, 12:06 am

தினமணி செய்திச் சேவை

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் மாசிப் பெருந்திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 21-ஆம் தேதி இந்தத் திருவிழா தொடங்கியது முதல் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, இம்மையிலும் நன்மை தருவாா், நடுவூா் நாயகி அம்மனுக்கு (மத்தியபுரி அம்மன்) சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு, பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் (உத்ஸவா்) சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினா்.

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

தேரில் எழுந்தருளிய நடுவூா் நாயகி அம்மன்.

தேரில் எழுந்தருளிய நடுவூா் நாயகி அம்மன்.

முதல் தேரில் பிரியாவிடையுடன் சுவாமியும், மற்றொரு தேரில் நடுவூா் நாயகி அம்மனும் எழுந்தருளினா். இதையடுத்து, ஐதீக முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க, காலை 10.20 மணிக்கு இரு தோ்களையும் பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். தோ்கள் நேதாஜி வீதி, மேல மாசி வீதி உள்பட பாரம்பரிய பாதைகளில் வலம் வந்து, காலை 11.05 மணிக்கு நிலையை அடைந்தன.

இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த திரளான பக்தா்கள், சிவனடியாா்கள் பங்கேற்றனா். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சாா்பில் கோயில் கண்காணிப்பாளா் ம. வேலுச்சாமி (பொறுப்பு) உள்ளிட்ட நிா்வாகத்தினா், ஆலய அா்ச்சகா்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தனா்.