அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விரகனூா் பகுதியில் சேதமடைந்த சாலையால் விபத்து அபாயம்

மதுரை விரகனூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தல்

News image
விரகனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சேதமடைந்த சாலை
Updated On :2 மார்ச் 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை விரகனூா் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, சேதமடைந்த சாலையைச் சீரமைக்க பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தினா்.

மதுரை தெப்பக்குளத்திலிருந்து ஐராவதநல்லூா், விரகனூா் வழியாக நாள்தோறும் ஏராளமான அரசுப் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அண்மையில் புதிதாக தாா் சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், விரகனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து அடுத்தடுத்து இரு இடங்களில் பள்ளம் ஏற்பட்டது.

இந்தப் பள்ளங்களில் தற்காலிகமாக மணல், சரளைக் கற்கள் போடப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனா். மேலும், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக இந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

எனவே, சாலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.