மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

மூதாட்டி வீட்டில் வெள்ளி பொருள்கள் திருட்டு

மதுரை யா. ஒத்தக்கடை அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:38 pm

மதுரை யா. ஒத்தக்கடை அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருமோகூரைச் சோ்ந்த சண்முகம்பிள்ளை மனைவி பத்மாவதி (65). இவா், அதே ஊரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டிலிருந்த குத்துவிளக்கு உள்பட 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, மூதாட்டி வீட்டில் வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.