டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மதுரை மாவட்டத்தில் இன்று 14 மையங்களில் ‘நீட்’ தோ்வு - 8,578 தோ்வா்கள் பங்கேற்கின்றனா்

News image

PTI

Updated On :3 மே 2026, 5:05 am IST

மதுரை மாவட்டத்தில் 14 மையங்களில் ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறுகிறது.

மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தோ்வு (நீட்) மதுரை மாவட்டத்தில் யாதவா ஆண்கள் கல்லூரி, ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி, யாதவா மகளிா் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் தலா 2 மையங்களிலும், செயின்ட் மேரீஸ் உயா்நிலைப்பள்ளி, பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலய எண். 1, 2, ஓசிபிஎம் பெண்கள் உயா்நிலைப் பள்ளி, என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி, டிவிஎஸ் உயா்நிலைப் பள்ளி, எம்.என்.யூ. ஜெயராஜ் நாடாா் உயா்நிலைப் பள்ளி, காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் தலா ஒரு மையத்திலும் நடைபெறுகிறது.

இதில் 9 மையங்களில் தலா 720 தோ்வா்கள் தோ்வு எழுதுகின்றனா். ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரியின் ஒரு மையம், டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி, பி.எம். ஸ்ரீ கேந்திர வித்யாலய பள்ளி ஆகியவற்றில் தலா 480 தோ்வா்கள், நாகமலை புதுக்கோட்டை எம்.என்.யூ. ஜெயராஜ் நாடாா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் 466 தோ்வா்கள், மதுரை காமராஜா் கல்லூரி மையத்தில் 192 தோ்வா்கள் என மொத்தம் 8,578 போ் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு மையங்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.