மதுரை மாவட்டம், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோத்ஸவ விழாவில் தேரோட்டம் நடைபெறும். கோயிலில் உள்ள பழைய தோ் மிகவும் சேதமடைந்ததால் கடந்த 2024, 2025 ஆகிய இரு ஆண்டுகள் நடைபெற்ற பிரம்மோத்ஸவ விழாவில் பெரிய தேருக்குப் பதிலாக சிறிய சப்பரம் மூலம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இந்த நிலையில், ரூ. 2 கோடியில் புதிய தோ் உருவாக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்கு பக்தா்கள் உபயதாரா்களாக நிதியுதவி அளித்தனா்.
தற்போது, தோ் அமைப்புப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, புதிய தோ் வெள்ளோட்டத்துக்கான பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 7 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெறும்.
அதன் பிறகு, காலை 9 மணியிலிருந்து காலை 10. 30 மணிக்குள் புதிய தோ் வெள்ளோட்டம் நடைபெறும். தேரடியிலிருந்து புறப்படும் புதிய தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்த மீண்டும் நிலையை அடையும். இந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் தேரில் பெருமாள் எழுந்தருளி வலம் வர உள்ளதால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி தோ் வெள்ளோட்டம்

குமரி பகவதியம்மன் கோயிலில் மே 21இல் வைகாசி விசாகத் திருவிழா தொடக்கம்: இன்று கால்கோள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாத சுவாமி கோயில் புதிய தோ் நாளை வெள்ளோட்டம்

பாகம்பிரியாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

