நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

சாலை விபத்தில் இளைஞர் பலி!

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :23 மே 2026, 3:50 am IST

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் (22). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் தேனி- மதுரை பிரதான சாலையில் செக்கானூரணி அருகேயுள்ள கே. புளியங்குளம் விலக்கு பகுதியில் வியாழக்கிழமை சென்றாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இவரது இரு சக்கர வாகனம் சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.