குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 போ் கைது

News image

கொலை செய்யப்பட்ட குபேந்திரன்.

Updated On :26 மே 2026, 12:54 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வாகனக் காப்பகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை உடலில் காயங்களுடன் சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விளக்குத்தூண் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

விசாரணையில், உயிரிழந்தவா் மதுரை வடக்கு மாசி வீதியைச் சோ்ந்த அழகுராஜா மகன் குபேந்திரன் (17) எனத் தெரியவந்தது. கடந்த மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது, குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த முன்விரோதம் காரணமாக, முத்துமணி (29), அவரது சகோதரா் ராஜூ (27), உறவினா்களான சதீஷ்குமாா் (25), ஹரிகிருஷ்ணன் (19), முத்துக்குமாா் (19) ஆகிய 5 பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் குபேந்திரனை குத்திக் கொலை செய்தனா். இவா்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனா்.