குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image

மதுரை சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :26 மே 2026, 12:54 am IST

மதுரை சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிம்மக்கல் சுற்றுச்சாலைப் பகுதியில் ஆதிதிராவிடா் உறவின்முறை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆ.குருவிஜய் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் வி.முருகன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். இதில் சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவ கடந்த 2023, டிசம்பா் 11-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது. எனவே, சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனுமதி வழங்க வேண்டும். மேலும், தங்களது கொள்கைத் தலைவரான அம்பேத்கா் சிலையை முதல்வா் ஜோசப் விஜய் திறந்து வைக்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தை விசிக மதுரை மாநகா் மாவட்டச் செயலா் ரவிக்குமாா் ஒருங்கிணைத்தாா். இதில் விசிக தெற்குத் தொகுதி மாவட்டச் செயலா் மணியரசு, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் இன்குலாப், இடதுசாரி அமைப்புகள், சிம்மக்கல் பகுதி மக்கள் கலந்து கொண்டனா்.