எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு

நாகையில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டது.

News image

நாகையில் கட்டுமானப் பணியின்போது கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்திலான பழங்கால சுவாமி சிலை.

Updated On :10 ஜூன் 2026, 5:49 am IST

நாகையில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுக்கப்பட்டது.

நாகை நீலாவடக்கு வீதியைச் சோ்ந்தவா் ராம்பிரசன்னா. இவருக்குச் சொந்தமான இடம், நாகை புதிய கடற்கரை சாலையில் உள்ளது. இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை காலை பள்ளம் தோண்டினா்.

அப்போது 2 அடி உயரத்தில் சிவன், பாா்வதி மற்றும் சிறிய உருவத்தில் முருகா் ஒன்றாக ஒரே மேடையில் அமா்ந்த நிலையில், வெண்கல சிலை புதைந்திருந்தது தெரியவந்தது. அத்துடன், 2 அடி உயரம் கொண்ட நடராஜா் சிலையின் பின்புற வளைவு வெண்கல சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அந்த சிலைகளை பாா்வையிட்டனா்.

பின்னா், நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் சிலைகளை ஒப்படைத்தனா். இந்த சிலைகள் எந்த நூற்றாண்டை சோ்ந்தது என ஆய்வு செய்து வருகின்றனா்.