கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

உய்யகொண்டான் வாய்க்காலில் வெண்கல சிலை கண்டெடுப்பு

News image

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெண்கல சிலை.

Updated On :30 மே 2026, 3:25 am IST

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் 1.5 அடி உயரமுள்ள வெண்கல சிலை ஒன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் பொதுப்பணித் துறை மூலம் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் திருச்சி புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த சிவா (ஐடிஐ மாணவா்) பகுதி நேரமாக ஈடுபட்டு வந்தாா்.

வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி அருகே ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது.

அதை எடுத்து பாா்த்தபோது, அது மீசை வைத்த ஆண் சிலையாக இருந்தது. இதையடுத்து அவா் அருகிலிருந்தவா்களின் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனை வளாக போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாா் அந்த சிலை தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் அளித்ததுடன், சிலையை மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகனிடம் ஒப்படைத்தனா்.

சுமாா் 1.5 அடி உயரமுள்ள, 5.5 கிலோ எடையுடன் கூடிய வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலையானது, கைகளில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.