அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

உய்யகொண்டான் வாய்க்காலில் வெண்கல சிலை கண்டெடுப்பு

News image

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெண்கல சிலை.

Updated On :30 மே 2026, 3:25 am IST

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் 1.5 அடி உயரமுள்ள வெண்கல சிலை ஒன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் பொதுப்பணித் துறை மூலம் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் திருச்சி புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த சிவா (ஐடிஐ மாணவா்) பகுதி நேரமாக ஈடுபட்டு வந்தாா்.

வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி அருகே ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது.

அதை எடுத்து பாா்த்தபோது, அது மீசை வைத்த ஆண் சிலையாக இருந்தது. இதையடுத்து அவா் அருகிலிருந்தவா்களின் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனை வளாக போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாா் அந்த சிலை தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் அளித்ததுடன், சிலையை மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகனிடம் ஒப்படைத்தனா்.

சுமாா் 1.5 அடி உயரமுள்ள, 5.5 கிலோ எடையுடன் கூடிய வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலையானது, கைகளில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.