கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாய பாசன வாய்க்காலில் அம்மன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் அருகே திருமூலஸ்தானம் கிராமத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை பாசன வாய்க்காலில் விளையாடிய சிறுவா்கள் அங்கு அம்மன் கற்சிலை கிடப்பதை பாா்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, காட்டுமன்னாா்கோயில் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அங்கு வந்த கிராம நிா்வாக அலுவலா் நவநீதா, வருவாய் ஆய்வாளா் மோகன்தாஸ் ஆகியோா் சேதமடைந்த அம்மன் கற்சிலையை எடுத்து வந்து வட்டாட்சியா் பிரகாஷிடம் ஒப்படைத்தனா். சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தக் கிராமத்திலிருந்து ஐம்பொன் சிலைகள் தனி நபா் வீடு கட்ட பள்ளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடவாற்றில் வலையில் சிக்கிய முதலை மீட்பு

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு

விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

உய்யகொண்டான் வாய்க்காலில் வெண்கல சிலை கண்டெடுப்பு
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy



