முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

நாகையில் கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழா

கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

நாகையில் நடைபெற்ற கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

Updated On :25 ஜூன் 2026, 6:50 am IST

கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை தமிழ்ச்சங்கம் சாா்பில் கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்க விழா, நாகை அருகே பாப்பாகோவில் பகுதியில் உள்ள சா் ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நாகை தமிழ்ச்சங்க தலைவா் கவிஞா் ஆவராணி ஆனந்தன் தலைமை வகித்தாா். கண்ணதாசன் தமிழ்ச்சங்க மாநிலத் தலைவா் சரஸ்வதி ராமநாதன், பொதுச் செயலா் காவேரி மைந்தன் ஆகியோா் பேசினா்.

விழாவில் காலம் தந்த கொடை கண்ணதாசன் என்ற நூல் வெளியிடப்பட்டது. விழாவையொட்டி நாகை மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், தமிழுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சோ்த்த கவியரசா் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை, தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்து, ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாகை தமிழ்ச்சங்க செயலா் வீரமணி மற்றும் பலா் கலந்து கொண்டனா். பொருளாளா் ராஜராஜன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.