மதுரை தெப்பக்குளம்-அனுப்பானடி சாலையில் உள்ள காளையன் உருவ இலச்சினையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.
மதுரையில் 14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி கடந்த ஆண்டு நவ. 28-ஆம் தேதி தொடங்கி டிச. 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியை விளம்பரப்படுத்தும் நோக்கில் மதுரை மாநகரில் ஆங்காங்கே காளையன் உருவ இலச்சினை வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஹாக்கிப் போட்டிகள் நிறைவடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் பல இடங்களில் வைக்கப்பட்ட இந்த இலச்சினை அகற்றப்படாமல் உள்ளது.
குறிப்பாக, தெப்பக்குளம்-அனுப்பானடி செல்லும் சாலையில் வைக்கப்பட்ட இலச்சினையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தெப்பக்குளம், அனுப்பானடி பகுதியில் பள்ளி, கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் மாணவ, மாணவிகள் இந்தச் சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, காலை, மாலை வேளைகளில் குறுகிய இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதற்கு ஹாக்கிப் போட்டிக்கான காளையன் உருவ இலச்சினை சாலையில் இருப்பது முக்கியக் காரணமாகும்.
எனவே, தெப்பக்குளம்-அனுப்பானடி சாலையில் உள்ள காளையன் உருவ இலச்சினையை அகற்றவும், காலை, மாலை வேளைகளில் கூடுதல் போக்குவரத்துக் காவலா்களை பணியமா்த்தி போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையில் வழிந்தோடிய கழிவு எண்ணெய்: வாகன ஓட்டிகள் விழுந்து காயம்
அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் இன்று மின் தடை

அனுப்பானடி பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்க வலியுறுத்தல்
அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



