திண்டுக்கல்ல் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில், பழனி குருவப்பா அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்றது.
திண்டுக்கல் ஸ்ரீ ரமணாஸ் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின 4 ஆவது ஆண்டு கபடிப் போட்டிகள் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் 24 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இதில், அனைத்துப் போட்டிகளிலும் பழனி குருவப்பா அரசு மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது. பழனி நகரவை மேல்நிலைப் பள்ளி அணி 2 ஆவது இடத்தையும், வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணி 3ஆவது இடத்தையும் பெற்றன.
செவ்வாய்க்கிழமை பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், ஏபிசி கல்லூரி முதல்வர் க.மணிவண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இயந்திரவியல் துறை தலைவர் ரகுநாத் கலந்து கொண்டு, வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முதல் பரிசு ரூ.7ஆயிரம், 2 ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3ஆம் பரிசு ரூ.3ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளி அணிக்கு ஆறுதல் பரிசு ரூ.2ஆயிரம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவையில் இரண்டு சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை

ஐ.டி. ஊழியரின் மனைவி தற்கொலை

ஓடிடியில் வெளியான துரந்தர் - 2!

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.60 லட்சத்தில் வழிபாட்டுக் கூடம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


