ஒட்டன்சத்திரத்தில் இணைய தள பத்திரப்பதிவு சேவையை வியாழக்கிழமை அர.சக்கரபாணி எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
ஒட்டன்சத்திரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள பத்திர எழுத்தர் வி.ஜி.சோமசுந்தரம் அலுவலகத்தில் இணையதள பத்திரப்பதிவு சேவையை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் பத்திரப் பதிவாளர் வீரமணி, திமுக நகரச் செயலர்
ப.வெள்ளைச்சாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் வீ.கண்ணன், வர்த்தக சங்கச் செயலர் பி.என்.கே.வெங்கடாஜலபதி, பத்திர எழுத்தர்கள் விஜயகுமார், குணசேகரன், நடராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.