கன்னிவாடி அருகே மளிகைக்கடையில் பணம் திருட்டு

கன்னிவாடி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டது.
Updated on
1 min read

கன்னிவாடி அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருடப்பட்டது.
கன்னிவாடி அருகே உள்ள தருமத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (45).இவர் தனது அண்ணன் செந்தில்குமார் மற்றும் தம்பியுடன் சேர்ந்து அப்பகுதியில் மளிகைகடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் செந்தில்குமார் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.   கன்னிவாடி போலீஸார்  விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com