மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

"உஜ்வாலா' திட்டம்: ஏப்.20-இல் 14 கிராமங்களில் செயல்படுத்தப்படும்: ஆட்சியர் தகவல்

உஜ்வாலா திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் ஏப்ரல் 20ஆம் தேதி இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என, ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.  

Updated On :18 ஏப்ரல் 2018, 8:11 am IST

உஜ்வாலா திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சிகளில் ஏப்ரல் 20ஆம் தேதி இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என, ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.  
திண்டுக்கல் மாவட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்துப் பேசியதாவது: 
ஏப்ரல் 20ஆம் தேதி உஜ்வாலா தினம் அனுசரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 14 கிராம ஊராட்சிகளில் 100 பேருக்கு, பாரதப் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.       இதில், கோரிக்கடவு, மானூர், எரமநாயக்கன்பட்டி, பச்சலநாயக்கன்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, மோர்பட்டி, பண்ணுவார்பட்டி, அணைபட்டி, வி.எஸ்.கோட்டை, புதுப்பட்டி, பாளையங்கோட்டை, நக்கலூத்து, சிவஞானபுரம் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு எரிவாயு விநியோகஸ்தருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறைந்தது 100 பேருக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும், மகளிர் சுய உதவிக்குழு, அங்கன்வாடி மற்றும் சத்துணவுப் பணியாளர் மூலம், எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களைக் கண்டறிந்து, இலவச எரிவாயு இணைப்பு பெறுவதற்கான மனுக்கள் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எரிவாயு இல்லாத குடும்பங்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். 
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. வேலு,  மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.