
ஒட்டன்சத்திரம் அருகே பெண்ணைக் கேலி செய்தவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெண்ணைக் கேலி செய்தவரை அம்பிளிக்கை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெண்ணைக் கேலி செய்தவரை அம்பிளிக்கை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சிந்தலப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி செல்வி (38). இவர் செவ்வாய்க்கிழமை அம்பிளிக்கை பேருந்து நிலையம் அருகே அதே ஊரைச் சேர்ந்த கண்ணம்மாள், கோமதி ஆகியோருடன் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது சிந்தலப்பட்டியைச் சேர்ந்த திருமலைசாமி மகன் மணிகண்டன் (40), செல்வியை பார்த்து கேலி செய்துள்ளார். இதுகுறித்து மாரிமுத்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




