எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

யானைகளை விரட்ட பைப் கருவி

பழனி வனத் துறை சார்பில், யானைகளை தொலைவிலிருந்தே சத்தம் எழுப்பி விரட்டும் வகையில் புதிய பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 டிசம்பர் 2018, 7:26 am IST

பழனி வனத் துறை சார்பில், யானைகளை தொலைவிலிருந்தே சத்தம் எழுப்பி விரட்டும் வகையில் புதிய பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்துக்குள்பட்ட பழனி வனச் சரகத்தில், தற்போது யானைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இந்நிலையில், மலையடிவாரத்திலுள்ள கிராமப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளை தடுத்து விரட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, பழனி வனச் சரகத்தில் புதிய முறையில் பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அங்குல விட்டம், 3 அடி உயரமுள்ள இரும்பு பைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இக்ககருவியில், சிறிய அளவிலான வெடியை  வைத்து வானத்தை நோக்கி இயக்கும்போது அதிக சத்தம் எழுகிறது. இந்த சத்தமானது, சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு கேட்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. மேலும், இந்த கருவியின் மேல் 50 அடி நீளமுள்ள நூல் கயிறு சுற்றப்பட்டுள்ளதால், கருவியை இயக்கும் வனப் பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதன்மூலம், பொதுமக்களுக்கும்,  வன விலங்குகளுக்கும் இடையேயான மோதல் தடுத்து நிறுத்தப்படும். தற்போது, பழனி வனச் சரகத்தில் 15 உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.