பழனி வனத் துறை சார்பில், யானைகளை தொலைவிலிருந்தே சத்தம் எழுப்பி விரட்டும் வகையில் புதிய பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் வன உயிரின சரணாலயத்துக்குள்பட்ட பழனி வனச் சரகத்தில், தற்போது யானைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இந்நிலையில், மலையடிவாரத்திலுள்ள கிராமப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகளை தடுத்து விரட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, பழனி வனச் சரகத்தில் புதிய முறையில் பைப் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அங்குல விட்டம், 3 அடி உயரமுள்ள இரும்பு பைப்பினால் தயாரிக்கப்பட்டுள்ள இக்ககருவியில், சிறிய அளவிலான வெடியை வைத்து வானத்தை நோக்கி இயக்கும்போது அதிக சத்தம் எழுகிறது. இந்த சத்தமானது, சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு கேட்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. மேலும், இந்த கருவியின் மேல் 50 அடி நீளமுள்ள நூல் கயிறு சுற்றப்பட்டுள்ளதால், கருவியை இயக்கும் வனப் பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதன்மூலம், பொதுமக்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையேயான மோதல் தடுத்து நிறுத்தப்படும். தற்போது, பழனி வனச் சரகத்தில் 15 உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக வனச்சரகர் கணேஷ்ராம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் மீதான திமுக அதிருப்தி விரைவில் சரிசெய்யப்படும்: காங்கிரஸ் எம்.பி.

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


