திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

திண்டுக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

இருபத்தியோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், திண்டுக்கல்

Updated On :25 டிசம்பர் 2018, 7:28 am IST

இருபத்தியோரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
        கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்பப் பணியாக வரையறை செய்ய வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
      இந்நிலையில், அந்தந்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் முருகன் தலைமை வகித்தார். இதில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.      மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கருப்புப் பட்டை அணிந்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
     இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் கூறியது: சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருவாய் நிர்வாக ஆணையரின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற சுகாதார ஆய்வாளர் மோகன், திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். 
 இதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இரங்கல் தெரிவிக்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட கூறவில்லை. அதனைக் கண்டித்து கருப்பு பட்டை அணிந்துள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.