புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தி விழா

ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தியை முன்னிட்டு வத்தலகுண்டு மடத்தில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வேத பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:11 pm

DIN

ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தியை முன்னிட்டு வத்தலகுண்டு மடத்தில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வேத பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
   காலை 8 முதல் இரவு 7 மணி வரை ஆச்சாரியர்கள் வேத பாராயணம் செய்தனர்.  முன்னதாக ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதணை நடைபெற்றது. 
வேத பாராயணத்தை தொடர்ந்து, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்ராஹார வீதியில் ராகவேந்திரர் படத்துடன் திருவீதியுலா நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வி.கோபாலன் சார்பில் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிறுவனர் பிஎஸ்.கோபிநாதன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.