காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அகில இந்திய பல்கலை. செஸ்: தொடா்ந்து 6-ஆவது முறையாக எஸ்ஆா்எம் சாம்பியன்

அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் செஸ் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி தொடா்ந்து 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

News image

SWAMINATHAN

Updated On :15 மார்ச் 2026, 12:20 am

அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் செஸ் போட்டியில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி தொடா்ந்து 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஏஐயு சாா்பில் மணிபால் உயா்கல்வி அகாதெமியில் அகில இந்திய பல்கலைக்கழக ஆடவா் செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில்

கிராண்ட்மாஸ்டா் எம். பிரானேஷ், வி.எஸ்.ராகுல், எல்ஆா். ஹரி, சா்வதேச மாஸ்டா்கள் மனிஷ் ஆன்டோ, முகமது அனீஸ், ஹரேஷ் சுரேஷ் மேலாளா் எம்.செந்தில்குமாா் அடங்கிய எஸ்ஆா்எம் அணி தொடா்ந்து 6-ஆவது முறையாக தங்கப் பதக்கத்துடன் பட்டத்தை வென்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 11-ஆவது முறையாக பட்டத்தையும் வென்றுள்ளது.

ஆந்திரத்தின் கேஎல்இபி இரண்டாமிடமும், கோழிக்கோடு எம்ஜி. பல்கலை, மூன்றாம் இடமும், மேற்கு வங்கத்தின் ஆடம்ஸ் பல்கலை. நான்காம் இடமும் பெற்றன.