ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடன் வட்டி கொடுக்காததால் மிரட்டல் : ஒட்டன்சத்திரத்தில் பெண் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில்  கடன்தொகைக்கு  வட்டிக்கேட்டு மிரட்டியதால் செவ்வாய்க்கிழமை பெண்  தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:48 am

DIN

ஒட்டன்சத்திரத்தில்  கடன்தொகைக்கு  வட்டிக்கேட்டு மிரட்டியதால் செவ்வாய்க்கிழமை பெண்  தற்கொலை செய்து கொண்டார்.
 ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உள்பட்ட காந்திநகர் 6-ஆவது வார்டைச் சேர்ந்தவர் பூபதி (40).இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருடைய மனைவி விமலாதேவி (31).இவர் குடும்ப தேவைக்காக சின்னையகவுண்டன்வலசு கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமுத்து (45) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினராம். அதற்கு மாதந்தோறும் வட்டி கொடுத்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வட்டி கொடுக்க முடியவில்லையாம். இதனால் பணம் கொடுத்த வள்ளிமுத்து தொலைபேசி மூலமும், நேரில் வந்தும் வட்டிக்கேட்டு மிரட்டினராம். இந்நிலையில், விமலாதேவி செவ்வாய்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிருக்கு போராடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவருடைய கணவர் பூபதி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வட்டிக்கேட்டு மிரட்டிய வள்ளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.