ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விபத்துகளை தவிர்க்க காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம்

திண்டுக்கல் மாவட்டம்  நத்தத்தில்  காவல்துறை சார்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைபெற்றது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:12 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம்  நத்தத்தில்  காவல்துறை சார்பில் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைபெற்றது. 
   நத்தம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நத்தம் காவல் ஆய்வாளர் ராம நாராயணன் பேசியதாவது:  
    தனியார் பேருந்து உரிமையாளர்கள், அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்களை உடனடியாக வேலையை விட்டு நிறுத்த வேண்டும். அதிகவேகமாக இயக்கப்படும் பேருந்து ஓட்டுநர்கள் மீது புகார் அளிப்பதற்கு, பேருந்தின் உரிமையாளரின் செல்லிடப்பேசி எண் பயணிகளுக்கு தெரியும் வகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். 
 வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டால், பேருந்து உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். ஆட்டோக்களில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை மீறி, பயணிகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகளினால் ஏற்பட்ட விபத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்காலத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கான முயற்சிகளை பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி, அனைத்து வகையான வாகன ஓட்டுநர்களும்மேற்கொள்ள வேண்டும் என்றார்.
  அப்போது சார்பு ஆய்வாளர்கள் வேல்முருகன், சேக்அப்துல்லா உள்ளிட்ட நத்தம் காவல் துறையினர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.