தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

மழையால் சாய்ந்த ஆலமரத்தை வெட்டிக் கடத்த முயற்சி: பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சரிந்து விழுந்த நிலையில்

Updated On :8 அக்டோபர் 2018, 7:43 am IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சரிந்து விழுந்த நிலையில், மர்ம நபர்கள் அந்த மரத்தை வெட்டிக் கடத்த முயன்றதை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
வத்தலகுண்டு அடுத்துள்ள சின்னுப்பட்டி கிராமத்தில், மருதாநதி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதேபகுதியில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரத்துடன், கன்னிமார் கோயில் மற்றும் முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. 
இந்நிலையில்,  கடந்த 25 நாள்களுக்கு முன்பு அந்த ஆலமரத்தில் தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, வத்தலகுண்டு தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு  அந்த ஆலமரம் மழையினால் வேரோடு சாய்ந்தது. இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள், சிலர் அம் மரத்தை வெட்டி கடத்த முயன்றனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னுப்பட்டி இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி அந்தோணி விவேக் தலைமையில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். மருதாநதி தடுப்பணை அருகே சென்றபோது, விழுந்து கிடந்த ஆலமரம் வெட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
இது தொடர்பாக பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறியது:
 இந்த ஆலமரம்  ஏலம் விடுவதற்காக வைக்கப்பட்டிருந்து. அதற்குள்ளாக மரத்தை யார் வெட்டினர் என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.