தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் வென்ற பிஎஸ்ஜி அணி குறித்து...

News image

சாம்பியன்ஸ் லீக்கை வென்ற மகிழ்ச்சியில் பிஎஸ்ஜி அணியினர். - படம்: ஏபி

Updated On :31 மே 2026, 10:50 am IST

பிரீம்யர் லீக்கின் சாம்பியன் ஆர்செனல் அணியை பிஎஸ்ஜி அணி பெனால்டி ஷுட் அவுட்டில் 4-3 என வீழ்த்தி, இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக்கை பிஎஸ்ஜி அணி வென்றது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5ஆவது நிமிஷத்தில் ஆர்செனலின் கை ஹைவெர்ட்ஸ் கோல் அடித்தார்.

முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், போட்டியின் 64ஆவது நிமிஷத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது.

பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. ஆர்செனல் சார்பில் எபிரேஸி, கேப்ரியல் மகல்ஹேஸ் கோல் அடிக்க தவறினார்கள். பிஎஸ்ஜி சார்பில் நுனோ மெண்டிஸ் கோல் அடிக்க தவறினார்.

இந்தப் போட்டியில் 72 சதவிகிதம் பந்தை தன்வசம் வைத்திருந்த பிஎஸ்ஜி அணி இலக்கை நோக்கி 4 முறை கோல் அடிக்க முயன்றது. டிஃபென்ஸில் பலம்வாய்ந்த ஆர்செனல் அணி சிறப்பாகவே தடுத்து வந்தது.

சாம்பியன்ஸ் லீக்கின் மன்னன் ரியல் மாட்ரிட் அணிக்குப் பிறகு பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது. தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் மூன்றாவது முறையாக இந்தக் கோப்பையை வென்றுள்ளார்.

முன்னதாக 2016-18 சீசனில் தொடர்ச்சியாக மூன்று முறை ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றிருந்தது.

Summary

PSG wins back-to-back Champions League titles after shootout victory against Arsenal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.