சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளராகும் லூயிஸ் என்ட்ரிக்!

பிஎஸ்ஜி அணியின் தலைசிறந்த பயிற்சியாளர் பட்டியலில் இடம்பிடித்த லூயிஸ் என்ட்ரிக் குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் பிஎஸ்ஜி அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக். - படம்: ஏபி

Updated On :14 மே 2026, 5:46 pm IST

பிஎஸ்ஜி கால்பந்து அணியின் தலைசிறந்த பயிற்சியாளர்கள் பட்டியலில் லூயிஸ் என்ட்ரிக் இடம்பிடித்துள்ளார். இதுவரை அந்த அணிக்காக அதிக கோப்பைகளை (11) வென்று கொடுத்தவராக முன்னாள் பயிற்சியாளருடன் சாதனையை சமன்செய்துள்ளார்.

முன்னதாக, பிஎஸ்ஜி அணிக்கு பயிற்சியாளர் லாரன்ட் பிளாங் 11 கோப்பைகளை வென்றுகொடுத்துள்ளார். தற்போது, இந்த சாதனையை தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் சமன்படுத்தியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் (56 வயது) பிஎஸ்ஜி அணிக்கு கடந்த 2023 முதல் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது தலைமையில்தான் பிஎஸ்ஜி அணி கடந்த சீசனில் முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. இந்த முறையும் சாம்பியன்ஸ் லீக் இறுதிக்கு பிஎஸ்ஜி அணி முன்னேறியுள்ளது.

ஆர்செனலை வீழ்த்தி மற்றுமொரு முறை சாம்பியன்ஸ் லீக்கை வென்றால், பிஎஸ்ஜி அணியின் வரலாற்றிலேயே அதிகமுறை கோப்பை (12) வென்ற பயிற்சியாளராக லூயிஸ் என்ட்ரிக் சாதனை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Luis Enrique Becomes PSG's histoy Best Coach!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.