சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி இறுதிக்கு முன்னேற்றம்..! பயர்ன் மியூனிக் வெளியேற்றம்!

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் வென்ற பிஎஸ்ஜி அணி குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் பிஎஸ்ஜி அணி வீரர்கள். - படம்: ஏபி

Updated On :7 மே 2026, 4:50 pm IST

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பிஎஸ்ஜி அணி அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

முதல்கட்ட அரையிறுதியில் பிஎஸ்ஜி 4-5 என முன்னிலை வகித்தது. இரண்டாம் கட்ட ஆட்டத்தில் 1-1 என சமநிலையில் முடிந்தது. ஒட்டுமொத்தமாக 5-6 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பிஎஸ்ஜி வென்றது.

இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் முதலில் பிஎஸ்ஜி அணியினர் 3ஆவது நிமிஷத்திலேயே கோல் அடித்தனர். கூடுதல் நேரத்தில் 90+4ஆவது நிமிஷத்தில் ஹாரி கேன் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.

இந்தப் போட்டியில் பெனால்டி கொடுக்காததால் பயர்ன் மியூனிக் அணியினர் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு அணியினருக்குமே 3 மஞ்சள் அட்டைகள் கொடுக்கப்பட்டன.

கடந்த சீசனில் முதல்முறையாக கோப்பை வென்ற பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் முன்னேறி இருக்கிறது. ஆர்செனல் அணியுடன் மே.30 ஆம் தேதி மோதுகிறது.

Summary

Champions League: PSG beat Bayern 6-5 on aggregate to reach final against Arsenal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.